» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாயமான மாணவிகளை மீட்க நடவடிக்கை : டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெற்றோர் புகார்
புதன் 30, நவம்பர் 2022 11:51:30 AM (IST)
சாத்தான்குளத்தில் மாயமான கல்லூரி மாணவிகள் இருவரை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி லதா. இவர்களது மகள் கார்த்திகா (19).இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் எப்சிபா செல்வகுமாரி (21). இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். தோழிகளான இவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி வங்கிக்கு செல்வதாக கூறிசென்றனர்.
பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் மாணவி கார்த்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று நெல்லை டி.ஐ.ஜி.அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், சாத்தான்குளம் போலீசில் மாணவிகள் மாயம் குறித்து புகார் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவிகளை உடனடியாக மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தனர்.
தொடர்ந்து மாணவியின் சகோதரர் நிருபர்களிடம் கூறுகையில், கல்லூரியில் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவிகள் இருவரும் மாயமாகி உள்ளனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தோம். ஆனால் மாயமாகி ஒருவாரம் ஆன நிலையிலும் போலீசார் சரிவர விசாரிக்காமலும் காலதாமதம் செய்கின்றனர். மாயமான மாணவிகளை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பண மோசடி செய்தவர் கைது
வியாழன் 26, ஜனவரி 2023 8:56:49 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா!
வியாழன் 26, ஜனவரி 2023 6:17:33 PM (IST)

போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பான செயல்பாடு: தூத்துக்குடி அதிகாரிக்கு ஜனாதிபதி விருது
வியாழன் 26, ஜனவரி 2023 6:11:57 PM (IST)

வெல்டிங் மிஷன் வைத்து அடகு கடையில் கொள்ளை முயற்சி - போலீஸ் விசாரணை
வியாழன் 26, ஜனவரி 2023 6:08:20 PM (IST)

மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் குடியரசு தின விழா
வியாழன் 26, ஜனவரி 2023 6:02:06 PM (IST)

விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)

எல்லாம்Dec 1, 2022 - 09:32:30 AM | Posted IP 162.1*****