» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு
செவ்வாய் 29, நவம்பர் 2022 4:56:51 PM (IST)

தேசிய அளவில் ரயில்வேகளுக்கு இடையான நீச்சல் போட்டியில் குரும்பூர் ரயில் நிலைய அலுவலர் 8 பதக்கங்கள் வென்று வென்று சாதனை புரிந்துள்ளார். .
இந்திய ரயில்வேயில் 17 ரயில்வே மண்டலங்கள் இணைந்துள்ளன. தேசிய அளவில் ரயில்வேகளுக்கு இடையான நீச்சல் போட்டி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மதுரை கோட்டத்தை சேர்ந்த திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் உள்ள குரும்பூர் ரயில் நிலைய பயண சீட்டு அலுவலர் எமில் ராபின் சிங் 8 பதக்கங்கள் வென்றுள்ளார்.
நான்கு தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனையை அறிந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் அவரை அழைத்து பாராட்டி மகிழ்ந்தார். அவருடன் முது நிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி எம். இசக்கி ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பண மோசடி செய்தவர் கைது
வியாழன் 26, ஜனவரி 2023 8:56:49 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா!
வியாழன் 26, ஜனவரி 2023 6:17:33 PM (IST)

போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பான செயல்பாடு: தூத்துக்குடி அதிகாரிக்கு ஜனாதிபதி விருது
வியாழன் 26, ஜனவரி 2023 6:11:57 PM (IST)

வெல்டிங் மிஷன் வைத்து அடகு கடையில் கொள்ளை முயற்சி - போலீஸ் விசாரணை
வியாழன் 26, ஜனவரி 2023 6:08:20 PM (IST)

மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் குடியரசு தின விழா
வியாழன் 26, ஜனவரி 2023 6:02:06 PM (IST)

விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)

P.S. RajNov 30, 2022 - 10:54:54 PM | Posted IP 162.1*****