» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் நிலையத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி!

சனி 15, ஜனவரி 2022 7:42:52 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி தெரியவந்துள்ளதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 3வது அலை பரவி வருவதையொட்டி கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் முககவசம் அணிவதுடன் சமுக இடைவெளியை கடை பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் கரோனா அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில்  கன்னியாகுமரிக்கு சென்று வந்த 45 வயது தலைமை காவலர் மற்றும் 28 வயது  பெண் காவலருக்கு சளி, காய்ச்சல் இருந்ததையொட்டி கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில்  நேற்று இருவருக்கும் கரோனா அறிகுறி தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் காவல் நிலைய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து இருவரும் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory