» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிலத்தகராறில் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி : ஒருவர் கைது

திங்கள் 18, அக்டோபர் 2021 4:43:59 PM (IST)

புளியம்பட்டி அருகே நிலத்தகராறில் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியன்குளம் தெற்கு காலனியைச் சேர்ந்தவர் வேலு மகன் ராஜ் (71) என்பவரது நிலமும் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி (67) என்பவரது நிலவும் அடுத்தடுத்து இருந்து வந்த நிலையில் இவர்களுக்குள் நில பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த முன்விரோதம் காரணமாக நேற்று (17.10.2021) ராஜ்-யை அவரது வீட்டு முன்பு வைத்து மாடசாமி அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory