» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு
திங்கள் 18, அக்டோபர் 2021 3:08:31 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி தெர்மல் நகர் அருகேயுள்ள பண்டுகரை சாலையில் வசிக்கும் பொதுமக்கள், ஆதிதமிழர் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் செந்தூர் பழனி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை குடியேறும் போராட்டம் நடத்தினர். அப்போது சிறுவர்கள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் பாய் விரித்து அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தூத்துக்குடிகோவில்பிள்ளை நகர் பின்பகுதியில் பண்டுகரை சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியல் அருந்ததியர் சமுதாயத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கும் மாற்றும் சமுதாயத்திறருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
கடந்த 04.01.2016ல் எங்கள் குடிசைக்கு தீவைக்கப்பட்டது. இதில் எங்களது உடமைகள் சேதம் ஆனது. தற்போது மீண்டும் கடந்த 14ம் தேதி சில மர்ம நபர்கள் எங்கள் பகுதிக்கு தீவைத்துள்ளனர். இதில், 10க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் கருகி, உடமைகள் சேதமானது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நடுத்தெரிவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்கள் பகுதியில் திட்டமிட்டு தீவைக்கும் குற்றவாகளிகள் மீது நடவடிக்கை எடுகக் வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.