» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)

வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் சிட்டகாங்க் மாகாணத்திற்கு உட்பட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள மொத்தம் 64 மாவட்டங்களில், சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்கள் தற்போது வெள்ளநீரால் சூழப்பட்டுப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு:
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாகப் பலி விபரம்:
காக்ஸ் பஜார் மாவட்டம்: 28 பேர் பலி.
சட்டோகிராம் பகுதி: 13 பேர் பலி.
பந்தர்பன் பகுதி: 6 பேர் பலி.
பலியானவர்களில் பெரும்பாலோர் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் ஆவர். மேலும், சிட்டகாங்க் மாகாணத்தில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)








