» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனின் முக்கிய நகரைக் கைப்பற்றியது ரஷ்யா: புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சனி 4, ஜூலை 2026 3:35:07 PM (IST)

PUtinAnnouncement.jpg

உக்ரைன் நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான கோஸ்டியான் டினிவ்கா நகரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா ஒரே இரவில் 74 ஏவுகணைகள், 496 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 48 ஏவுகணைகளையும் 476 ட்ரோன்களையும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய 25 அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளும் 12 ட்ரோன்களும் நகரின் முக்கியப் பகுதிகளில் விழுந்து வெடித்ததாகவும் உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைனின் கோஸ்டியான் டினிவ்கா நகரைக் ரஷ்யப் படைகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள மிக முக்கிய உத்தேசப் பகுதியைக் கைப்பற்றியுள்ள ரஷ்யப் படைகள், அங்கிருந்து அடுத்தகட்ட இலக்குகளை நோக்கி மேலும் தீவிரமாக முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பு உக்ரைன் தரப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory