» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, ரஷிய தூதருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இச் சூழலில், உக்ரைனின் ஒடேசா நகரத் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 19-ஆம் தேதி கினியா பிசாவ் நாட்டுக்கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தின.
இத் தாக்குதலில் கப்பலில் பயணித்த இந்திய மாலுமிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு இந்திய மாலுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து விளக்கமளிக்கக் கோரி, புதுடெல்லியிலுள்ள ரஷிய தூதருக்கு மத்திய அரசு முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளது. இச் சம்பவம் சர்வதேச அளவிலும், இந்திய வெளியுறவுத்துறை மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிகளவு போதையால் சவுதி இளவரசர் மரணம்: பிரிட்டன் நீதிமன்ற விசாரணையில் உறுதி
வெள்ளி 24, ஜூலை 2026 4:15:17 PM (IST)

கப்பல்களைத் தாக்கினால் ஈரானின் மின் நிலையங்கள் அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வியாழன் 23, ஜூலை 2026 11:36:09 AM (IST)

ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை: இந்தியா, சீனா வந்த 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் திசைமாற்றம்!
புதன் 22, ஜூலை 2026 4:22:18 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)








