» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீஷெல்ஸ் நவசக்தி விநாயகர் கோயிலில் மோடி வழிபாடு: உலக அமைதிக்காகப் பிரார்த்தனை!

திங்கள் 29, ஜூன் 2026 3:45:56 PM (IST)



மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகச் சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று விக்டோரியாவில் உள்ள புகழ்பெற்ற நவசக்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று உலக அமைதி மற்றும் செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்தார்.

சீஷெல்ஸ் நாட்டின் முக்கிய இந்து ஆலயமான விக்டோரியா நவசக்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடத்திய பின்னர், நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் தமிழில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "சீஷெல்ஸ் நாட்டின் முக்கிய இந்து ஆலயமான விக்டோரியாவில் உள்ள நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன். கணேசர் அனைவருக்கும் ஞானம், வலிமை மற்றும் வளத்தை அருளட்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory