» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிறை தண்டனை பெற்ற தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை!
செவ்வாய் 21, மே 2024 5:32:39 PM (IST)
சிறை தண்டனை பெற்ற தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜாக்கோப் ஸூமா தேர்தலில் போட்டியிட அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் தென்ஆப்பிரிக்காவில் வரும் 29-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட 82 வயதான ஜாக்கோப் ஸூமா மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு சட்டப்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தென்ஆப்பிரிக்க உச்சநீதிமன்றத்தில் ஜாக்கோப் ஸூமா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே குற்றவியல் வழக்கில் ஜாக்கோப் ஸூமா சிறை தண்டனை பெற்றுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவு
சனி 15, பிப்ரவரி 2025 12:55:06 PM (IST)

மோடி - ட்ரம்ப் சந்திப்பு : பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:29:36 PM (IST)

இலங்கை மின்திட்டங்களில் இருந்து அதானி குழுமம் விலகல் : 440 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரத்து!!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:30:04 PM (IST)

உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)

பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 11:46:06 AM (IST)
