» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆயுத உதவி கிடைத்திருந்தால் ரஷியாவின் தாக்குதலை தடுத்திருக்க முடியும்: உக்ரைன்
வியாழன் 18, ஏப்ரல் 2024 11:40:08 AM (IST)
மேற்கத்திய நாடுகள் உரிய காலத்தில் ஆயுதங்களை கொடுத்திருந்தால் ரஷியாவின் தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஷியா - பெலாரஸ் எல்லையில் அமைந்துள்ள செர்னிஹிவ் மாகாணத்தில் 2.5 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் உதவியுடன் உக்ரைன் சமாளித்து வந்தாலும், ரஷியாவின் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றது. குளிர்காலத்தை கருத்தில் கொண்டு தீவிர போரை நடத்தாமல் இருந்த ரஷியா, உக்ரைனின் ஆயுத தட்டுப்பாட்டை அறிந்து தற்போது போரில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ள 80 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளுக்கு இன்னும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் உக்ரைன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உரிய காலத்தில் ஆயுதங்களை கொடுத்திருந்தால் செர்னிஹிவ் மீதான தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)
