» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா: இலங்கை மக்கள் பங்கேற்ப்பு; இந்தியர்கள் புறக்கணிப்பு

சனி 24, பிப்ரவரி 2024 4:29:33 PM (IST)

இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து கலந்துகொள்ளும் திருவிழாவான கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழாவில் இலங்கை பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்தியர்கள் புறக்கணித்தனர்.

ஆண்டுதோறும் இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து வெகு விமர்சையாக நடைபெறும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இந்த திருவிழா பிப்ரவரி 23-24 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா வியாழக்கிழமை மாலை (பிப். 23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதில், சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன.

ஆண்டு திருவிழா திருப்பலி நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த திருவிழாவில் இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாரும் பங்கேற்கவில்லை.

இந்த திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இன்றைய திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் அதிபரின் செயலாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory