» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் கைதாகி விடுவிக்கப்பட்ட நபர் படுகொலை!
புதன் 30, நவம்பர் 2022 12:23:17 PM (IST)
இலங்கையில் 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் டஜன் கணக்கான வெளிநாட்டினர் உள்பட 265 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த பயங்கரவாத தாக்குலில் தொடர்புடையதாக கூறி இலங்கையின் மட்டக்குளியா நகரை சேர்ந்த 38 வயதான முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பதுர்தீன் நேற்று முன்தினம் மட்டக்குளியா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பதுர்தீனை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் போர் முடிவுக்கு வராததற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்: ரஷ்யா குற்றச்சாட்டு
புதன் 25, ஜனவரி 2023 11:05:35 AM (IST)

அமெரிக்காவில் அடுத்தடுத்து 3 இடங்களில் துப்பாக்கிசூடு : உயிரிழப்பு 9-ஆக அதிகரிப்பு
செவ்வாய் 24, ஜனவரி 2023 10:30:56 AM (IST)

இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழா 3நாட்கள் நடைபெறும்: பக்கிங்ஹாம் அரண்மனை
திங்கள் 23, ஜனவரி 2023 10:34:58 AM (IST)

இந்தியாவுக்கு கூடுதல் விசா சலுகை கிடையாது : இங்கிலாந்து அமைச்சர் திட்டவட்டம்
திங்கள் 23, ஜனவரி 2023 10:26:42 AM (IST)

காரில் சீட் பெல்ட் அணியாத பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!
சனி 21, ஜனவரி 2023 4:49:47 PM (IST)

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் குண்டு கண்டெடுப்பு; 3ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
சனி 21, ஜனவரி 2023 11:58:42 AM (IST)
