» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்குவங்கத்தில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 6 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:14:51 PM (IST)

மேற்குவங்கத்தில் பிரபல கோவில் அருகே இயங்கி வந்த ஹோட்டலில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் புகழ்பெற்ற தாராபீத் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அப்பகுதியில் உள்ள விடுதிகளில் தங்குவது வழக்கம். இந்நிலையில், தாராபீத் கோவில் அருகே செயல்பட்டு வந்த ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஹோட்டலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் தீ பற்றியதால், அங்குத் தங்கியிருந்த பக்தர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இத்தீ விபத்தில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், தீவிரமாகப் போராடிப் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து நேரிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory