» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!

திங்கள் 27, ஜூலை 2026 12:28:52 PM (IST)

delhiprotestSuprem.jpg

டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடித் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடித் தாக்குதல்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்ததாவது: "அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மாணவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் முழு உரிமை வழங்கியுள்ளது. இந்த உரிமையைக் கட்டுப்பாடு என்ற பெயரில் காவல்துறை தடுக்கக் கூடாது.

வெறும் போராட்டங்களை மட்டுமே காரணம் காட்டி, மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்துவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதிகப்படியான பலத்தைப் பிரயோகிக்கக் கூடாது. போராட்டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்களோ அல்லது வன்முறைச் சம்பவங்களோ நிகழ்ந்தால் மட்டுமே காவல்துறை அதற்குத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதை விடுத்து அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது அதிகப்படியான பலத்தைப் பிரயோகிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் நாளை (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றம் முறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory