» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!
வெள்ளி 15, மார்ச் 2024 11:01:57 AM (IST)
கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாயார் அளித்தப் புகாரின் பேரில் பெங்களூரு சதாசிவநகர் போலீஸார் நேற்றிரவு (வியாழன்) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 17 வயது சிறுமியும் அவரது தாயும் ஒரு மோசடி வழக்கில் உதவி நாடி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் சந்திக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயர் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.