» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொழிற்சாலை தீவிபத்தில் 11 பேர் பலி: உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 11:48:24 AM (IST)



டெல்லியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலியான நிலையில், அதன் உரிமையாளர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டெல்லியின் அலிபூா் பகுதியில் உள்ள தயாள்பூா் சந்தையில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து குறைந்தது ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வந்தனர். ஆனால், தீ மளமளவென முழு கட்டிடத்திற்கும் பரவியது.

இதையடுத்து, மேலும் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 10 ஆண்கள், ஒரு பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிஜேஆர்எம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு, இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் உரிமையாளர் மீது டெல்லி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory