» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அபிஷேக் கோசல்கர் படுகொலை: அஜித் பவார் கண்டனம்!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 5:00:04 PM (IST)



மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அபிஷேக் கோசல்கர் படுகொலைக்கு மகாராஷ்டிர துணை முதல் முதல்வர்  அஜித் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை தகிசர் பகுதியில் பேஸ்புக் லைவ் ஷோவில் பேசிக் கொண்டிருந்த சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அபிஷேக் கோசல்கர் படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிர துணை முதல் முதல்வர்  அஜித் பவார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியபதாவது: மகாராஷ்டிராவில் இதுபோன்ற படுகொலை சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இருவருக்கும் இடையே நட்புறவு இருந்தது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. இந்த கொலைக்கான பின்னணி குறித்து ஆராயப்படும். முதல் மந்திரியுடன் இதுபற்றி கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory