» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர்: எம்.ஜி.ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதன் 17, ஜனவரி 2024 10:46:46 AM (IST)

மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

இன்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் இருந்தார். அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி குறித்த படங்கள் வெள்ளித்திரையை தாண்டி இதயங்களை வென்றன.

தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory