» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுற்றுலா பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்!

புதன் 3, ஜனவரி 2024 12:55:43 PM (IST)

அஸ்ஸாமில் இன்று அதிகாலை சுற்றுலாப் பேருந்தும்,  லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 12 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜன் நகருக்கு 45 பேர் கொண்ட ஒரு குழுவினர் கமர்பந்தா பகுதியில் இருந்து சுற்றுலாப் பேருந்தில் சுற்றுலா சென்றனர். பேருந்து திலிங்க மந்திர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை 5 மணியளவில் பலிஜன் அருகே நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பேருந்தில் இருந்தவர்களில் 10 சம்பவ இடத்திலேயே பலியாகினர், 2 பேருந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஜோர்ஹட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோலாகட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory