» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.20 சதவீதமாக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

சனி 30, டிசம்பர் 2023 10:00:14 AM (IST)

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.இந்நிலையில், வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் அளிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 3 ஆண்டு டைம் டெபாசிட் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகிய இரு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

  • 3 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி 7.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மற்ற திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory