» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் ‍: பியூஷ் கோயல்

வெள்ளி 29, டிசம்பர் 2023 5:26:43 PM (IST)

இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றமடையும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது; "2027-ம் ஆண்டு இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உயரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதிலும் குறிப்பாக, அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றமடையும். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக விளங்கும்.

இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில், குறைந்த பணவீக்கம் மற்றும் அதிக வளர்ச்சி விகிதத்தோடு மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக திகழ்கிறது." இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory