» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விலை அதிகரிப்பு எதிரொலி: வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!

வெள்ளி 8, டிசம்பர் 2023 3:20:09 PM (IST)

வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory