» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி 8, டிசம்பர் 2023 11:01:43 AM (IST)
தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் நேற்று இரவு எர்ரவல்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதுடன் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.