» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி செந்தில் குமார் மன்னிப்பு கேட்டார்!

புதன் 6, டிசம்பர் 2023 4:03:30 PM (IST)

இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த திமுக எம்பி செந்தில் குமார் மன்னிப்பு கோரியுள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது மக்களவையில் பேசிய திமுக எம்.பி செந்தில்குமார், "யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக்க எதிர்பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. பாஜக பல மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது. எப்போது அவர்களால் வெல்ல முடியவில்லையோ அந்த மாநிலத்தை அவர்கள் யூனியன் பிரதேசமாக்கிவிடுகிறார்கள். அங்கே கவர்னர்கள் மூலம் ஆட்சி நடத்துகிறார்கள்.

பசு கோமிய (கோ மூத்ரா) மாநிலங்கள் என்று நாம் பொதுவாக அழைக்கும் இந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

செந்தில் குமாரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. செந்தில் குமாரின் இந்த பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் கண்டித்துள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான ஸ்டாலினும் எம்.பி செந்தில்குமாரை கண்டித்து, அவரது கருத்தை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தமது பேச்சுக்கு திமுக எம்.பி செந்தில்குமார் வருத்தமும் மன்னிப்பும் கேட்டு எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செந்தில் குமார் பதிவிட்டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory