தூத்துக்குடியின் வரலாறு (8 of 10)

இவ்வாராக இந்தியாவிலேயே முதல் "சுதேச நீராவிக் கப்பல் கம்பெனி" தோன்றி, ஆங்கில காலணி ஆதிக்க வேறுபாடுகளை அறுக்கும் இந்திய மக்களின் கூட்டு முயற்சியின் சின்னமாக காட்சியளித்தது. இலவச கம்பல் பயணம், சுதேச கம்பெனி அமைப்பார்களை மிரட்டல், ரயில்வே நிலையத்தில் தங்கள் கப்பலுக்கு பயணிகளை சேர்க்க தரகர்களை நியமித்தல் போன்ற பல நேர்மையற்ற முறைகளை பிரிட்டிஸ் கம்பெனியார் கையாண்டனர்.

சோதனையும் வேதனையும் நிறைந்த இந்த நேரத்தில் சிதம்பரனாருக்கு இரு கரங்கள் போல் இரு நண்பர்களின் அரிய ஒத்துழைப்பு கிடைத்தது. ஒருவர் தீப்பொறிக்கும் தேசியவாதி சுப்பிரமணியசிவா மற்றொருவர் பிரசங்க சிங்கமென்றழைக்கப்பட்ட பத்மநாத அய்யங்கார்.


சுதேசியத்தையும், அன்னியநாட்டு பொருட்களை தவிர்க்கவும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், உள்நாட்டு தொழில்களை உற்சாகப்படுத்தவும், 1908ல் "தூத்துக்குடி மக்கள் சங்கம்" என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வ.உ.சி. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தனத்தை தூக்கி எறிய இந்திய மக்கள் ஒன்று திரண்டு அணிவகுத்து நிற்கவேண்டுமென பேசினார்.
 
பிரிட்டிஷ் அரசாங்கம் சிதம்பரம்பிள்ளை செயலை தேச துரோகமாக கருதி அவரை கைது செய்து. திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாட்டை விட்டு வெளியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
 
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவே, அவர் தண்டனை 6ஆண்டுகால கடுங்காவலாக குறைக்கப்பட்டது. மக்களுடைய திறமைவாய்ந்த தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதால், பழி வாங்கும் உணர்ச்சி வசப்பட்ட மக்கள் சமுதாயத்தில் அமைதியற்ற ஓர் நிலை தோன்றியது.
 
அரசாங்கத்தை எதிர்க்க, பல ரகசிய சதிக்குழுக்கள் செயல்பட ஆரம்பித்தன. இந்த சூழ்நிலையின் உச்சக்கட்டமாக 1911ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி வாஞ்சு ஐயர் என்னும் ஓர் தீவிர புரட்சிக்காரர் ஓர் ரகசியக் குழுவில் உறுப்பினர் கலெக்டர் ஆஷை அவர் கொக்கிகுளத்திற்கு பயணம் செய்யும் பாதையில் மணியாச்சி இரயில் சந்திப்பில் சுட்டுக் கொலை செய்தார்.
 
இது சம்பந்தமான வழக்கு விசாரணையில் ரகசிய அரசியல் குழுக்கள் சதிதிட்டங்கள் வெளிப்பட்டன. ஒரு இரும்புக் கரங்கொண்டு அரசாங்கம் இந்த தீவிரவாதிகளின் கூட்டங்களையும், செயல்களையும் அடக்கினர். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின், மஹாத்மா காந்தியின் தலைமையில் உருவான சுதந்திர போராட்டத்தால் தூத்துக்குடி ஓர் சிறப்பான பங்கினை வகித்தது. சிதம்பரம்பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டவுடன் சுதேசிய கப்பல் கம்பெனிக்கு பல இன்னல்கள் ஏற்பட்டு இறுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.


Favorite tags



Thoothukudi Business Directory