» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.60 லட்சம் திருட்டு: 2பேர் கைது

செவ்வாய் 9, டிசம்பர் 2025 11:27:08 AM (IST)



தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.60 லட்சம் திருடிய வழக்கில் ரவுடி உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி பி அன் டி காலனி, 7வது தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் மகள் ட்ரிபினா திலைக் (23). இவர் கடந்த 7ஆம் தேதி இரவு வீட்டை அடுத்த தெருவில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவில் உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 60ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தாளமுத்துநகர் இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சிவா (எ) ஜீவா (19), அம்பேத்கர் நகர் சுரேஷ் மகன் பிரவீன் (20) ஆகிய 2பேரும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.93ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளது. கைதான சிவா மீது வழிப்பறி உட்பட 6 வழக்குகள் இருப்பதாகவும், ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory