» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைதீர்ப்பாளர் நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

செவ்வாய் 10, மார்ச் 2026 5:02:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்ட குறைதீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட குறைதீர்ப்பாளராக போ.கருப்பசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகள், தங்கள் குறைகளை தெரிவிக்க மாவட்ட குறைத்தீர்ப்பாளரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரிலோ அல்லது 8925811330 என்ற அலைபேசி வாயிலாகவோ [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவித்து, குறைகளை நிவிர்த்தி செய்திட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory