» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் : செயல் அலுவலர் தர்ணா போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:46:58 PM (IST)

ஆழ்வார்திருநகரியில் கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக கூறி கோவில் செயல் அலுவலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் அமைந்துள்ள ஆதிநாதர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நான்கு சென்டு இடம், சுமார் 1 முதல் 2 கோடி ரூபாய் பெரு மதிப்புள்ள இடமாக உள்ளது. இந்த நிலையில், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் உதவியோடு ஜெகதீஷ் என்பவர் கோவில் இடத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி இடத்தை அபகரிக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து கோவில் செயல் அலுவலர் சதீஷ் என்பவர் கட்டிடம் கட்டும் இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிட பணிகளை நிறுத்திய பிறகு அந்த இடத்திலிருந்து செயல் அலுவலர் சதீஷ் கிளம்பி சென்றார். மேலும் கோவில் இடத்தை வேறு யாரும் அபகரிக்க முன்வரக் கூடாது என காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி வாழ்த்திய சார் ஆட்சியர்
செவ்வாய் 10, மார்ச் 2026 8:19:24 PM (IST)

ஈரானிலிருந்து மெழுகு இறக்குமதியில் சிக்கல்: தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்
செவ்வாய் 10, மார்ச் 2026 8:05:18 PM (IST)

ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைதீர்ப்பாளர் நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:02:57 PM (IST)

குடியிருப்பிற்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பு - தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:15:26 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

தூத்துக்குடியில் காடாக மாறிய மாநகராட்சி பூங்கா: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:49:00 PM (IST)








