» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் : செயல் அலுவலர் தர்ணா போராட்டம்!

திங்கள் 8, டிசம்பர் 2025 4:46:58 PM (IST)



ஆழ்வார்திருநகரியில் கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக கூறி கோவில் செயல் அலுவலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் அமைந்துள்ள ஆதிநாதர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நான்கு சென்டு இடம், சுமார் 1 முதல் 2 கோடி ரூபாய் பெரு மதிப்புள்ள இடமாக உள்ளது. இந்த நிலையில், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் உதவியோடு ஜெகதீஷ் என்பவர் கோவில் இடத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி இடத்தை அபகரிக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனைக் கண்டித்து கோவில் செயல் அலுவலர் சதீஷ் என்பவர் கட்டிடம் கட்டும் இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிட பணிகளை நிறுத்திய பிறகு அந்த இடத்திலிருந்து செயல் அலுவலர் சதீஷ் கிளம்பி சென்றார். மேலும் கோவில் இடத்தை வேறு யாரும் அபகரிக்க முன்வரக் கூடாது என காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory