» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனை ஓலை வெட்ட முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!

திங்கள் 8, டிசம்பர் 2025 4:23:58 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பனை ஓலைகளை வெட்ட முயன்றபோது, தவறி விழுந்து, மரம் வெட்டும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார.  

தூத்துக்குடி அத்திமரப்பட்டி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிள் மகன் முத்துமாரி (49), உடைமரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள் என்ற மனைவியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 3ஆம் தேதி தனது வீட்டின் மொட்டை மாடியில் ஏறி அருகில் இருந்த பனைமரத்தின் ஓலையை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கால் தவறி வீட்டின் கழிவறையில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory