» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடுத்தவர் மனைவியிடம் பேசிய வாலிபருக்கு கத்திக்குத்து : கணவருக்கு வலைவீச்சு

வெள்ளி 10, மே 2024 8:50:02 AM (IST)

தட்டார்மடம் அருகே தனது மனைவியிடம் பேசிய வாலிபரை சரமாரியாக‌ கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,  தட்டார் மடம் அருகே உள்ள பெரியதாழை முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த திருமணி மகன் ஆத்திமுத்து (24). கூலித்தொழிலாளி. இவர் அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் இசக்கிமுத்து என்பவரது மனைவியிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை இசக்கி முத்து கண்டித்துள்ளார். ஆனாலும், இசக்கிமுத்துவின் மனைவியிடம் பேசுவதை ஆத்திமுத்து நிறுத்தவில்லையாம். 

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திமுத்து ஒர்க்ஸ் ஷாப் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த இசக்கிமுத்து அவரிடம், தனது மனைவியுடன் பேசக்கூடாது என கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து கத்தியால் ஆத்திமுத்துவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

பலத்த காயமடைந்த ஆத்திமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாமா பத்மினி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இசக்கிமுத்துவை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory