» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேராயரிடம் ஆசிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்!!
வியாழன் 28, மார்ச் 2024 5:46:48 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயரிடம் குமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் ஆசி பெற்றார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயர் ஏ.ஆர். செல்லையா-வைமரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்றார்.
பால்வளத் துறை அமைச்சர் மனோ.தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகர திமுக செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.