» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரசாயனம் கலந்த பழச்சாறுகள் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை பாயுமா..?

சனி 27, ஏப்ரல் 2024 12:20:05 PM (IST)



தூத்துக்குடியில் ரசாயனம் கலந்த பழங்கள், பழச்சாறு விற்பனையை தடுக்க  உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கடும் உஷ்ணத்தை தணித்துக்கொள்ள மக்களில் பலர், உடல் சூட்டை தணிக்கும் அவசரத்திலும், பழத்தை சுவைக்கும் பரவசத்திலும் கண்ணெதிரே இருக்கும் ஓர் ஆபத்தைக் காணாமல் கடந்து செல்கிறார்கள். தாகம் தணிக்க நாம் உண்ணும் தர்பூசணி முதலிய பழங்களிலும், பருகும் பழச்சாறுகளிலும் இரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரசாயன மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இப்பழங்களை வாங்கி பொதுமக்கள் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும்,  இரசாயன பொடிகள் கலக்கப்பட்ட குளிர்பானங்கள், பழரசங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கோடை வெய்யில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் தாகத்தை தணிக்க குளிர்பானங்களை அதிகளவில் பருகி வருகின்றனர். ஆனால் குளிர்பானங்களில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த பழங்கள், குளிர்பானங்கள் விற்பனையை தடுக்க  உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவராம் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  


மக்கள் கருத்து

SoundarapandianApr 28, 2024 - 11:40:05 AM | Posted IP 162.1*****

வியாபாரம் பெரும்பாலும் ஏமாற்று தானே இதில் என்ன தவறு

கணேஷ்Apr 28, 2024 - 11:32:11 AM | Posted IP 162.1*****

பேருந்து தடத்தில் இயக்கவும் அடிஷனலாக போனால் இப்படித்தான் ஆகும்

முருகேசன்Apr 27, 2024 - 06:41:06 PM | Posted IP 172.7*****

இத்தகைய தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

தி.ஜெகதீசன்.மில்லர்புரம்.Apr 27, 2024 - 05:34:44 PM | Posted IP 162.1*****

இது அவசியம் ,அதிகாரிகள் உடன் ஆய்வு இப்படி ரசாயணம் கலப்பதைதயவுசெய்து கண்டுபிடித்து.மக்களைகாப்பாற்றுவார்களா? அரசுஅதிகாரிகள் உடன் நடவடிக்க எடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வலிறுத்துகிறேன் .

உடனடி நடவடிக்கை தேவை. அப்பாவி மக்களை கொன்றுவிடாமல் தடுக்கவும் செய்வார்களா அரசு அதிகாரிகள் தி.Apr 27, 2024 - 05:28:51 PM | Posted IP 172.7*****


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory