» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின்

செவ்வாய் 26, மார்ச் 2024 12:11:09 PM (IST)



தூத்துக்குடியில் இன்று பிரச்சாரத்திற்காக வந்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர் ஒருவரின் வீட்டில் தேநீர் அருந்தினார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கனிமொழியை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

இரவில் தூத்துக்குடி சத்யா ஓட்டலில் ஓய்வெடுத்தார். இந்த நிலையில், இன்று காலை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், பல்வேறு பகுதிகளில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். அந்த வகையில், தூத்துக்குடி லையன்ஸ் ஸ்டோன் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்-போது லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்கு சென்ற முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது வீட்டில் தேநீர் அருந்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory