» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சனையில் கொடூரமாக தாக்கிவாலிபர் கொலை : அண்ணன் வெறி செயல்!

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 6:35:43 PM (IST)

தூத்துக்குடி அருகே குடும்ப விவகாரத்தில் தம்பியை கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி வடக்கு செவல் காலனியை சேர்ந்தவர் சேதுராமன் (36). பனைத் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் ராமநாதன் (38) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. நேற்று வீட்டில் இருந்த ராமநாதனுக்கும், சேதுராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

ஆத்திரமடைந்த ராமநாதன் கம்பியால் தனது தம்பி சேதுராமனை தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த சூரங்குடி காவல் நிலைய போலீசார், சேதுராமனின் சடலத்தை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராமநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை விளாத்திகுளம் டி.எஸ்.பி., பிரகாஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory