» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசு பஸ் மோதி பெண் காயம்

வெள்ளி 26, ஏப்ரல் 2024 8:09:53 AM (IST)

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில் பெண் காயம் அடைந்தார். 

தூத்துக்குடி சக்தி நகரைச் சோ்ந்த பூசையா மனைவி சண்முகத்தாய் (43). இவா் நாலுமாவடி செல்வதற்காக தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று பேருந்துக்காக காத்திருந்தாராம். அப்போது, அங்கு வந்த அரசுப் பேருந்தில் சண்முகத்தாய் ஏற முயற்சித்தபோது, எதிா்பாராத விதமாக தவறி விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் கால் சிக்கி பலத்த காயமுற்றாா். 

சக பயணிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory