» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்: இந்திய அணிக்கு ராகுல் ஆறுதல்

திங்கள் 20, நவம்பர் 2023 11:34:14 AM (IST)

"இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இதனால், இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். அந்த வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவித்து கூறியுள்ளதாவது;

"இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அடுத்து வருவதை நாம் வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

இவன்Nov 25, 2023 - 11:19:29 AM | Posted IP 172.7*****

இத்தாலி கோமாளி பப்பு பேச்சை பாரு.

REALNov 20, 2023 - 03:58:01 PM | Posted IP 172.7*****

இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது இவனுக்கு மிகுந்த சந்தோஷம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory