» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அரசியலில் இருந்து விரட்ட முடியாது, மக்கள் நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் : சசிகலா
செவ்வாய் 12, ஏப்ரல் 2022 5:17:00 PM (IST)
தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அது நிச்சயம் வெற்றி பெறும் என என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சேலத்தில் சசிகலா இரண்டாவது நாள் ஆன்மிகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சேலம் தாரமங்கலம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இங்கு ஏராளமான தொண்டர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு சசிகலா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, கொங்குமண்டல மக்கள் அன்பாக உபசரித்தார்கள். இது மன மகிழ்ச்சியை தருகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ஒருவர் அரசியலில் இருப்பதும் இல்லாமல் போவதும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு. தனி ஒரு மனிதராக யாரும் சொல்ல முடியாது. அதனால் தமிழக மக்களும், கழகத் தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது. மேலும் தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் பெரும் ஆதரவு எனக்கு உள்ளது. தமிழக மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அது நிச்சயம் வெற்றி பெறும் எனவும் பேசினார்.
மக்கள் கருத்து
கடவுளுக்கு தெரியும்Apr 14, 2022 - 04:59:59 PM | Posted IP 173.2*****
திருட்டு குடும்பம்
தமிழன்Apr 13, 2022 - 06:51:19 PM | Posted IP 108.1*****
கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம் செய்கிறார் !
MGR ரசிகன்Apr 15, 2022 - 10:22:01 AM | Posted IP 173.2*****