» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
வடக்கு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு
செவ்வாய் 15, மார்ச் 2022 3:49:34 PM (IST)
தென்னகத்தை விட வடக்கு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில், நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
கரோனா தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டன. தென்னிந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட வடக்கு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தென்னிந்திய ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை வெறும் ரூ.308 கோடி மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.