» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இரவு 10 மணி வரை தேர்தல் பிரசார நேரம் நீட்டிப்பு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வெள்ளி 11, பிப்ரவரி 2022 5:16:04 PM (IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கான நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம். பிரசாரத்தின் போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory