» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், தூத்துக்குடி தாமோதரநகர் DMNS. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பதின்ம மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 108 மாணவர்களும் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் ச.சந்தோஷ் குமார் 493/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர்கள் R.தீபக் கண்ணன், S.பிரணீஷ் ஆகியோர் 492 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாதி B.சிவ ரஞ்சனி 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக அறிவியல் பாடத்தில் 8 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவிகளும் 100/100 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.பள்ளி அளவில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் தெக்ஷிணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர் நாடார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் நேரில் பாராட்டி, முதலிடம் பிடித்த மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

