» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளியில் புதிய பயணத்தின் புன்னகை நாள் விழா
திங்கள் 6, அக்டோபர் 2025 12:24:33 PM (IST)

தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் 2025-2026 கல்வி ஆண்டின் இரண்டாம் பருவ தொடக்க நிகழ்ச்சியாக புதிய பயணத்தின் புன்னகை நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெபஸ்டின் தங்கபாண்டி தலைமை தாங்கினார். ரீத்தம்மாள்புரம் பங்கின் அருள்தந்தை அத்தனாசியூஸ் ஜோ மற்றும் லயன் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இரண்டாம் பருவ தொடக்க நாளில் புன்னகை பூத்த முத்துடன் பள்ளிக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவியருக்கும் பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெபஸ்டின் தங்கபாண்டி மாணவர்களை வாழ்த்தி ஆசி வழங்கினார்.
மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், மலர் கொடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அருள்தந்தை அத்தனாசியூஸ் ஜோ தேசியக் கொடி ஏற்றுவித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் ஆசி கூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். பெற்றோர் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

