» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நீட் தேர்வில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவர் சாதனை
சனி 26, ஜூலை 2025 8:32:59 AM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்று திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் - விஜயரதி தம்பதி மகன் செல்வ சதீஷ். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், கடந்த 2022-23ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வுக்கு எழுதினார். அதில் 720-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தார். அவருக்கு, திருச்செந்தூர் அரசுப் பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், மேலாண்மைக் குழு தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)


