» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா
சனி 19, ஜூலை 2025 3:13:40 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மரக்கன்றினை நட்டு வைத்தார். தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி நுழைவு வாயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த செண்பக மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், வளர்ந்த மரங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
மரக்கன்று நடுவதற்கான ஏற்பாடுகளை தாளாளர் பிரபாகர், தலைமையாசிரியர் குணசீலராஜ் வழிகாட்டுதலின்படி, பசுமை மன்ற பொறுப்பாசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், விவசாய பிரிவு தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)


