» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனியில் அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி ஊராட்சியில், அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து 5வது ஆண்டாக இலவச நோட்டு வழங்கும் விழா மாதா நகரில் நற்பணி மன்ற பொறுப்பாளர் தொம்மை அந்தோணி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட வழக்கறிஞர் மோகன் தாஸ், அரசு மருத்துவமனை எலும்பு முறிவு டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கி சிறப்புரை ஆற்றினர். முன்னதாக மன்ற நிர்வாகி விமல் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மன்ற நிர்வாகி வினோ நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகள் அழகர், முத்து, மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

