» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!

வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையின் மாணவர் பேரவை நிறைவு விழா  நடைபெற்றது.

விழாவிற்கு ஆரம்பமாக கணினி அறிவியல் துறை  பாடகர் குழுவினர் இறைவணக்கப்  பாடல் பாடினர்.நான்காம் ஆண்டு மாணவர் டெரிக் ஜோஸ் வேத பாடம் வாசித்தார். இறுதி ஆண்டு மாணவி இசபெல் ஆரம்ப ஜெபம் செய்தார்.

கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜெமில்டா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ஜெயக்குமார் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து செய்தி மலரை வெளியிட்டுப் பேசினார். மாணவர் பேரவை செயலாளர்  சுரேஷ்  ஆண்டறிக்கை வாசித்தார்.  மூன்றாம் ஆண்டு மாணவர் ஆறுமுகநயினார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி டவர் ஹவுஸ் எண்டர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஷாரோன் D ரோஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. நான்காம் ஆண்டு மாணவி திவ்யா நன்றியுரை ஆற்றினார்‌. நிறைவாக பாடகர் குழுவினர் தேசிய கீதம் பாடினர்.

இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியின்  முதல்வர் முனைவர் எஸ். ஜெயக்குமார் தலைமையில், கணினி துறைத் தலைவர் முனைவர் ஜெமில்டா, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எமிலி எஸ்தர் ராணி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory