» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சுகாதார உதவியாளர் சான்றிதழ் வழங்கும் விழா
வியாழன் 1, மே 2025 7:51:10 PM (IST)

கோவில்பட்டியில் சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செம்கார்ப் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பளிப்பு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஒரு மாத கால சுகாதார உதவியாளர் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த சுகாதார உதவியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிய பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின்ஜோஸ் தலைமை வகித்தார்.செம்கார்ப் நிறுவன மேலாளர் செல்வகுமார் கலந்து கொண்டு சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். இதில் கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா, பைபால் ட்ரீ பவுண்டேசன் நிறுவன பணியாளர்கள் ஆதி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சுகாதார உதவியாளர் பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)


