» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களை தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் கிரிக்கெட் வீரராக உருவாக்கும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தூத்துக்குடியில் சிஎஸ்கே டிடிசிஏ டிராபிக் 2025 என்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் அல்பர்ட் முரளிதரன் தலைமையில், செயலாளர் கிரிஷ்பின் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
டிலைட் பப்ளிக் பள்ளி மைதானத்தில் 20ஓவர் அடிப்படையில் விறுவிறுப்பாக பிப்ரவரி ஏழாம் தேதி முதல் நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சென்ட் ஆன்ஸ் பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி, கீழ ஈரால் ஆக்சிலியம் பள்ளி, கோவில்பட்டி பிருந்தாவன் கிட்ஸ் யூனிவர்சிட்டி பள்ளி, மேல ஈரால் விஎம்ஏஆர் ஹிந்து நாடார் நடுநிலைப்பள்ளி, சென்ட் ஆண்டனிஸ் மெட்ரிக் பள்ளி, கீதா மெட்ரிக் பள்ளி, ஆறுமுகநேரி கமலாவதி மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி ரவீலா வித்யாலயா உள்ளிட்ட 16 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதிப் போட்டியில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியும் புனித அன்னாள் பள்ளியும் மோதின. இதில், அழகர் பள்ளி அணி 116 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய புனித அன்னாள் பள்ளி அணி 87 எடுத்தது. 27 ரன் வித்தியாசத்தில் அழகர் பள்ளி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கும் வீரர்களுக்கும் டிலைட் பப்ளிக் பள்ளி தலைவர் ஜெயசீலன் தாளாளர் பிரபாகரன் ஜான் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.
பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர்கள் ஜோன்ஸ் விக்டர், டாக்டர் மகிழ் ஜான் சந்தோஷ், ஒயிட் பீல்டு ஆர்தர், ஜெயசீலன், ராமையா, இணைச் செயலாளர் சுப்பிரமணியன், உதவிச் செயலாளர் சாமுவேல்ராஜ், பொருளாளர் கணேஷ் குமார் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் முன்னாள் என்னால் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

