» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா

வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்கதாக பாரத சாரணர் இயக்கம் பல்வேறு செயல் திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் திருச்சி மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்ற சாரணர் இயக்கத்தின் 75வது ஆண்டு விழா நிறைவு  பெருந்திரள் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், அழைத்துச் சென்ற  பொறுப்பாசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. 

தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜோஸ்வா சாம்துரை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்  ஜாகின் ஜோகித் பால் ஆகியோருக்கு மூன்று வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பொறுப்பாசிரியர்களாக மாணவர்களை அழைத்துச் சென்ற ஆபிரகாம் இம்மானுவேல் மற்றும் ஸ்டீபன் பிரேம்குமார் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. 

பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம்  முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory