» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்கதாக பாரத சாரணர் இயக்கம் பல்வேறு செயல் திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் திருச்சி மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்ற சாரணர் இயக்கத்தின் 75வது ஆண்டு விழா நிறைவு பெருந்திரள் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜோஸ்வா சாம்துரை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் ஜாகின் ஜோகித் பால் ஆகியோருக்கு மூன்று வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பொறுப்பாசிரியர்களாக மாணவர்களை அழைத்துச் சென்ற ஆபிரகாம் இம்மானுவேல் மற்றும் ஸ்டீபன் பிரேம்குமார் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)


