» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அகப்பைகுளம் பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி
சனி 23, மார்ச் 2024 9:58:51 AM (IST)
நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் டிஎன்டிடிஏ துவக்கப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை சார்பில் நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் டின்டிடிஏ துவக்கப்பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை அகப்பைகுளம் பழைய மாணவர் சங்க தலைவர் பொன்ராஜ் துவக்கி வைத்தார். மாணவ_ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பவனி சென்றனர். இதனை தொடர்ந்து
பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது . அகப்பைகுளம் குருவானவரும் , பள்ளி தாளாளருமான பாஸ்கரன் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை ரோஸ்மேரி வரவேற்றார் . திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இயக்குநர் ஜான் சாமுவேல் உலக தண்ணீர் தினம் குறித்தும், தண்ணீரின் அவசியம், பயன்பாடு மற்றும் சேமிப்பு குறித்தும் மாணவ_ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.தலைமை ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.